கற்பு
கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி - படிப்பு என்பதுபோல் கல- கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும், "வற்பெனப்படுவது சொற்றிறம்பாயை!" என் கிற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை; அதாவது, நாணயம், சத்தியம். ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் என்கின்றதான கருத்துகள் கொண்டதாசு இருக்கிறது.
அதைப் பகாப்பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருளைப் பார்த்தால் அறிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும், அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்களே காணக் கிடைக்கின்றன.
அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு, கிரமமான கருத்துப் பார்க்கும்போது, இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுற்றம் என்கின்ற வார்த்தையும், கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. அதாவது, சேஸ்டிடி (Chastity) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி வர்ஜினிட்டி (Virginity) என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே - எவ்வித ஆண், பெண் பணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இவ்வாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கிறது என்பதைக் காணலாம். ஆகவே, கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல எனபதும்; அதுவும் ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுக்கமாயிருந்தாலும் கற்பப் போய்விடுகிறது என்கின்ற கருத்துக் கொள்ளக்கூடியதாயுமிருக்கின்றது. ஆளால், ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம், அதாவது பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொன்டவர், பதியைத் தவிர வேறு யாரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அடிமைத்தன்மையை இவ்வார்த்தை புலப்படுத்துகின்றது. ஆனால், தலைவி என்ற பதத்திற்கும், நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்று பொருள் குறிக்கப்பட்டிருப்பதாலும், அது அன்பு கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும், பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய. வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை, அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் நாயகி என்கின்ற வடித்துளமுள்ள பதங்களும், சதைகளிலும், புராணங்களிலும் ஆண் பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே, காமத்தையும், அன்பையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் நாலி தலைவர் தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
periyar books,periyar books in tamil,periyar,periyar books list in tamil,tamil,periyar written books in tamil,books,periyar speech,tamil news live,tamil news today,tamil leader periyar,periyar book review,books written by periyar,tamil news headlines,tamil book review,tamil news,tamil translated books,sun news tamil,tamil speech,book review in tamil,tamil news sun tv,thanthai periyar,roots book in tamil,periyar biography,tamil cinema pen yen adimaiyanal,pen yen adimaiyanal audiobook,pen yen adimaiyanal periyar,pen yen adimaiyanal periyar book,pen yen adimaiyanal periyar online,pen yen adimaiyanal periyar review,pen yen adimaiyanal katturai in tamil,yean,pen yen adimaiyanal book,pen yen adimaiyanal?,pen yen adimaiyanal karpu,pen yen adimaiyanal kadhal,pen ean adimaiyaanaal,yean tamil,about pen yen adimaiyanal book,pen yen adimaiyanal book writer,pen yen adimaiyanal book in english free books,tamil books,tamilnadu school books pdf free download,tamil ebooks,tamil books pdf download,tamil books free download,free download tamil books pdf,tamil books pdf free download,tamil nadu text book free download,tamil spiritual books pdf free download,tamil books free download pdf format,how to get free books,tamil books pdf,tamil books pdf reader,books in tamil,tamil books to read,download cbse books pdf,read books for free, freetamilebooks, தந்தை பெரியார்,தந்தை பெரியார் தத்துவங்கள்,தந்தை பெரியார் காவியம்,பெரியார் காவியம்,பேசும் நூல் | மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம் | தந்தை பெரியார் | பகுதி 1 | nk,பேசும் நூல்,தமிழ் கதைகள்,தனித்த மௌனங்கள்,சுட்டி கதைகள்,பெண் ஏன் அடிமையானாள்,மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்,தமிழ் நியூஸ்,நீலம் சோசியல்,கதை,நாவல்,ரேடியோ,குறு நாவல்,நியூஸ்7 தமிழ்,பொழுதுபோக்கு,தமிழ் ஆடியோ புக்,கவிதை எழுதுவது எப்படி,sun news live,tamil news live,live news
0 Comments: