பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல்கள் | Interviews of Aringar Anna in Tamil

புத்தகம்

பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல்கள்

எழுத்து

அறிஞர் அண்ணா

PDF

EPUB

MOBI

To Hear the Audio Book

இந்தியும் திராவிட நாடும்

(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)
சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம். தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக நம்புகிறோம். ஆனால் தாங்கள் அது கூடாது என எதிர்ப்பதாகவும் அதற்கு முக்கியக் காரணமாக இந்தி ஆரிய மொழி என்று கூறுவதாகவும் கேள்விப் பட்டோம். ஆகவே, இது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.
சி்.என்.ஏ: மகிழ்ச்சி. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, யார் என்னைப்பற்றித் தப்பாகப் பிரசாரம் செய்கிறார்களோ அவர்களையே நீங்கள் முதலில் சந்தித்திருக்கிறீர்கள்.
சதுர்வேதி: இல்லை. இல்லை. அப்படி நினைக்காதீர்கள்.
சி.என்.ஏ.: நாங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாகவும் பார்ப்பன துவேஷத்தால் எதிர்ப்பதாகவும் தங்களிடம் மாதவ மேனன் போன்றோர் தப்பாகக் கூறி இருக்கிறார்கள். ஆனால்இந்தி திணிக்கப்படவேண்டாம் என்று கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே நாங்கள் இந்தியை எதிர்த்திருக்கிறோம். கட்டாய இந்தி கூடாது என்ற கிளர்ச்சி செய்திருக்கிறோம்.
 தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று இந்தியைப் புகுத்துபவர்கள் காரணம் சொல்கிறார்கள். அதைக் காட்டியே இராஜகோபாலாச்சாரியார் இந்தியைப் கொண்டுவந்தார். அப்போது நாங்கள் எதிர்த்தோம். பலன் பெற்றோம். அற்குள்ள காரணம் எங்கள் குழந்தைகள் தாய்மொழி தமிழ், அகில உலக மொழி ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது. இது கடினமாகும்.

Categories:
Similar Books

0 Comments: